Thursday, July 3, 2014

பாட்டியின் பத்து மாதப் சூத்திரம் ???

ஒரு பொண்ணு எப்ப ஒரு கொழந்தைக்கி தாயாகுறாளோ.. அப்பத்தான் அவ முழுமை அடையிறா.. அதுனால இதுதான் உன் வாழ்க்கையின் முக்கியமான தருணம். அதுனால கவனமா இருக்கனும்...”                                               
                                        


“தாய் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணமும்தான் சேய்க்கு சேருங்கிறது அனுபவப் பாடம். அதனால நல்ல எண்ணங்கள வளத்துக்க... முடிஞ்ச வரை மனச் சஞ்சலத்துக்கு எடங்கொடுக்காத... சாப்பாட்டுல பழங்களையும் கீரை களையும் காய்களையும் நெரையா சேத்துக்க... 5 மாசம் வரைக்கும் கடுமையான வேலை எதையும் செய்யாத... அதுக்குப் பொறவு சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்யலாம். வேலையே செய்யாம படுத்திருக்குறதும் தப்பு.... ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செய்யிறதும் தப்பு... 5 மாசம் வரைக்கும் ஒம் வீட்டுக்காரன கொஞ்சம் ஒதுங்கியே இருக்கச் சொல்லு... நீண்ட தூரப் பயணம் போகவே போகாத... கூட்ட நெரிசலானஎடங்களுக்கும் போகாத. அமைதியும் சந்தோஷமும் ரொம்ப முக்கியம். ஒனக்கு எது சந்தோஷமான விஷயமோ அதைச் செஞ்சுக்கிட்டுரு... நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்... இனிமையான பாட்டுகளக் கேக்கலாம்...”

“இந்த மாதிரி நேரத்துல அம்மா வீட்டுலதான் தன் விருப்பத்துக்கு இருக்க முடியும். அதுனாலதான் புள்ளத்தாச்சி புள்ளையளெ, அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கிறது பழக்கம்.... கொழந்தங்கிறது நம்ம வாழ்க்கையோட அடுத்தக்கட்ட அடையாளம். அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி... அத ஆரோக்கியமானதா பெத்தெடுக்க வேண்டியது நம்மோட கடமை... இப்போதைக்கு வேற எதையும் நீ மனசுல போட்டுக்குறப்புடாது... கொழந்தை ஒன்னுதான் ஒம்மனசுல நிக்கணும்...”

“அப்புறம்... கொழந்த வளர வளர.. வயிறு பெரிசாகும். அப்போ மூச்சுத் தெணறுற மாதிரி இருக்கும்.. அப்பப்ப கால்ல நீர் கோத்து வீங்கிக்கும்... நெஞ்சு படபடக்குறமாதிரி இருக்கும்... அடிக்கடி மலச்சிக்கல் வரும்.. இப்ப மருந்து சொல்றேன் கேட்டுக்க....”

“அதிமதுரம், நற்சீரகம், ஜடமாஞ்சில், பட்டை நீக்கிய வில்வ வேர், வட்டச் சாரணை வேர், காய்ந்த முடக்கற்றான், சித்தரத்தை, நிழல்ல காயவச்ச குருந்தட்டி இது எல்லாத்துலயும் வகைக்கு 5 கிராம் எடுத்து ரெண்டு கொவள தண்ணி ஊத்தி நல்லா கொதிக்க வையி.. அது வத்தி ஒரு கொவளையா வந்ததும் ஒரு கொவள எளனி தண்ணிய ஊத்தி மறுபடியும் கொஞ்சம் கொதிக்க ஆரம்பிச்சதும் எறக்கி மூடி ஆறவையி...”

“நல்லா ஆறினதும் வடிகட்டி 5 வது மாசத்திலருந்து 7வது மாசம் வரைக்கும் ஒருநா விட்டு ஒரு நா காலைல 11 மணி லேர்ந்து 12 மணிக்குள்ள இல்லன்னா... சாயந்தரம் 4 மணிலேர்ந்து 6 மணிக்குள்ள சாப்பிடு.. 7வது மாசத்திலேர்ந்து கொழந்த பொறக்குற வரைக்கும் தெனமும் ஒரு வேளை குடி... மருந்து கசக்குமோன்னு பயந்துடாதடியம்மா.. இனிப்பாத்தான் இருக்கும்...“

“நாஞ் சொன்ன மாதிரி மருந்து சாப்பிட்டு வந்தின்னா.. கொழந்தைக்கும் எந்தவிதமான நோயும் வராது... பிரசவமும் சுகப்பிரசவமா இருக்கும்...”

  உரிமம் : நக்கீரன்

No comments:

Post a Comment