Thursday, January 10, 2013

விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

                போபால் விபத்தும் அக்னிஹோத்ர ஆராய்ச்சியும்

வேதம் கூறும் யக்ஞத்தை மேலை நாடுகள் விஞ்ஞான பூர்வமாக ஆர்வத்துடன் ஆராய ஆரம்பித்து வெகு காலமாயிற்று. அந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களை வியக்க வைத்தன. ஆனால் வெளி உலகிற்கு அதிகமாகத் தெரியாத இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவில் 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி நடந்த கோர விபத்தினால் வெளி வந்து பிரபலமாகி அக்னிஹோத்ரத்தின் மகிமையை அதிகமாகப் பரப்பின.
யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து கசிந்த MIC விஷ வாயு அந்த டிசம்பர் இரவில் ஏராளமானோரை பலி வாங்கியது.
ஆனால் சோஹன்லால் குஷ்வாஹா என்பவர் தன் வீட்டில் வாந்தி எடுக்க ஆரம்பித்த போது அவர் மனைவி உடனடியாக அக்னி ஹோத்ரம் செய்யச் சொன்னார். சோஹன்லால் அக்னிஹோத்ரம் செய்யவே அவர் வாந்தி நின்றது. விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இருபதே நிமிடங்களில் சுற்றுப்புறம் முழுவதும் விஷம் அகன்றது!

மேலும் படிக்க 

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

மேலும் படிக்க

ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேத ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம். இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை.
 
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகப் பணியாற்றும் அஜய் அனில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர், தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்க முடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடு தான்! உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப் புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புத் தான் அதற்கான மாமருந்து என்று  சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.
 

Amazing Similarities between Mayas and Hindu Nagas !

Amazing Similarities between Mayas and Hindu Nagas

( The first part of this article is Are Mayas, Indian Nagas?)

1. Strange co incidence: Kali Yuga 3102 BC and Maya Yuga beginning 3114 BC

2. Maya appearance: Maya people of Central America look exactly like Manippur or Nagaland people.

3. Maya architecture resembled Pallava and South East Asian monuments

4. Justifying their name NAGAS (Sanskrit name for snake) Snake Symbol is found every wherein Naga buildings.

5. “Maya”– was the divine architect in Hindu mythology. Justifying the name Maya, we see a lot of huge buildings in the Maya countries Mexico, Honduras, Belize and Guatemala.

மேலும் படிக்க